‘கருப்பு’ வெளியீட்டில் திடீர் குழப்பம்.. காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Karuppu திரைப்படம் வெளியீட்டு நாளிலேயே சர்ச்சையில் சிக்கியுள்ளது. Suriya நடித்துள்ள இந்தப் படம் இன்று (மே 14) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 9 மணி சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இயக்குநர் RJ Balaji இயக்கியுள்ள இந்தப் படத்தில் Trisha Krishnan நாயகியாக நடித்துள்ளார். முதல் இரண்டு நாட்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்ததால், ரசிகர்கள் ஆர்வமாக முன்பதிவு செய்திருந்தனர்.
ஆனால் அதிகாலை நேரத்தில் தயாரிப்பாளர் S. R. Prabhu வெளியிட்ட திடீர் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. “தவிர்க்க முடியாத காரணங்களால் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன” என்று மட்டும் தெரிவிக்கப்பட்டதால், படம் முழுமையாக வெளியாகுமா என்ற குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், எப்போது ரீபண்ட் கிடைக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையில், பணச் சிக்கல், ஓடிடி உரிமை பிரச்சனை மற்றும் விநியோகஸ்தர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
திரைப்பட விமர்சகர் பிஸ்மி வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ‘கருப்பு’ திரைப்படம் இன்று வெளியாகுமா அல்லது மே 15-ஆம் தேதிக்கு தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Prasanth Subramani