கோவையில் பிரம்மாண்ட இன்டெக்-2026 கண்காட்சி.. 650-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் ஜூன் 4 முதல் தொடக்கம்!
கோவை கொடிசியாவில் ஜூன் 4 முதல் 5 நாட்கள் நடைபெறும் இன்டெக்-2026 சர்வதேச தொழிற் கண்காட்சியில் 650-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் இன்டெக்-2026 (INTEC 2026) சர்வதேச தொழிற் கண்காட்சி, கோவை கொடிசியா வளாகத்தில் வருகிற ஜூன் 4-ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது.
தொழில்துறை வளர்ச்சி, நவீன உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் பொறியியல் துறையின் புதிய கண்டுபிடிப்புகளை ஒரே இடத்தில் அறிமுகப்படுத்தும் இந்த பிரம்மாண்ட கண்காட்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்த ஆண்டு நடைபெறும் இன்டெக்-2026 கண்காட்சியில் 650-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதில் இயந்திர உற்பத்தி, தானியங்கி தொழில்நுட்பம் (Automation), தொழிற்சாலை உபகரணங்கள், ரோபோடிக்ஸ், பொறியியல் தீர்வுகள், மின்சார மற்றும் மின்னணு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்னேற்றங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இந்த கண்காட்சி தொழில்துறை நிறுவனங்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், பொறியியல் மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களுக்கான முக்கிய தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CODISSIA Trade Fair Complex வளாகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி, உற்பத்தித் துறை மற்றும் தொழில்நுட்ப உலகின் எதிர்கால போக்குகளை அறிந்து கொள்ள சிறந்த வாய்ப்பாக அமையும்.
தொழில்துறை வளர்ச்சியில் கோவையின் முக்கியத்துவத்தை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டும் நிகழ்வாக இன்டெக்-2026 அமையவுள்ளது.
Prasanth Subramani