ஹைதராபாத்தை வெளியேற்றிய ராஜஸ்தான்.. IPL எலிமினேட்டரில் 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றி!
IPL 2026 எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறியது.
IPL 2026 தொடரின் பரபரப்பான ‘எலிமினேட்டர்’ போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்று குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த தோல்வியால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு சீசனிலிருந்து வெளியேறியுள்ளது.
நியூ சண்டீகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் என்ற மாபெரும் ஸ்கோரை பதிவு செய்தது.
ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ஹைதராபாத் பந்துவீச்சாளர்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்தனர்.
244 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் சில அதிரடி ஷாட்களை விளாசினாலும், தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் தனது பயணத்தை நீட்டித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது ‘குவாலிஃபயர் 2’ போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அந்த போட்டியில், ‘குவாலிஃபயர் 1’ ஆட்டத்தில் RCB அணியிடம் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை ராஜஸ்தான் எதிர்கொள்ள உள்ளது.
இந்த முக்கியமான போட்டி வெள்ளிக்கிழமை (மே 29) நியூ சண்டீகரில் நடைபெற உள்ளது. வெற்றி பெறும் அணி IPL 2026 இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
Prasanth Subramani