கோவையில் போதைப்பொருள் விற்பனை: 7 பேர் கைது; 3.5 கிலோ கஞ்சா, 1,708 போதை மாத்திரைகள் பறிமுதல்

கோவை சர்வதேச விமான நிலையம் பின்புற பகுதியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சா, 1,708 போதை மாத்திரைகள் மற்றும் ரூ.21,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையில் போதைப்பொருள் விற்பனை: 7 பேர் கைது; 3.5 கிலோ கஞ்சா, 1,708 போதை மாத்திரைகள் பறிமுதல்

கோவையில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1,708 போதை மாத்திரைகள், 3.5 கிலோ கஞ்சா மற்றும் ரூ.21,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புற பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பீளமேடு போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1,708 போதை மாத்திரைகள், 3.5 கிலோ கஞ்சா மற்றும் ரூ.21,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.5 லட்சத்துக்கும் அதிகம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவுக்கு சென்று குறைந்த விலையில் போதை மாத்திரைகளை வாங்கி, அவற்றை கோவையில் விற்பனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த போதைப்பொருள் விற்பனை வழக்கில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.