முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்.. புதிய 23 அமைச்சர்கள் யார்? முழு விவரம்!
முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை 23 புதிய அமைச்சர்களுடன் விரிவுபடுத்தப்பட்டது. புதிய அமைச்சர்களின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (TVK) அமைச்சரவை இன்று 23 புதிய அமைச்சர்களை இணைத்து விரிவுபடுத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்களும் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தமிழ்நாடு அரசில் மீண்டும் இணைந்துள்ளது.
சென்னை லோக் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக, கடந்த மே 10ஆம் தேதி முதல்வர் விஜய் உட்பட 10 அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர்.
புதிய அமைச்சர்கள் மற்றும் துறைகள்:
- ஏ. ஸ்ரீநாத் – மீன்வளம் மற்றும் மீன்வள மேம்பாடு
- எஸ். கமலி – கால்நடை பராமரிப்பு
- சி. விஜயலட்சுமி – பால் மற்றும் பால் வளத்துறை
- ஆர்.வி. ரஞ்சித்குமார் – வனத்துறை
- ஆர். வினோத் – வேளாண்மை மற்றும் உழவர் நலம்
- வி.கே. ராஜீவ் – சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்
- பி. ராஜ்குமார் – வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
- வி. காந்திராஜ் – கூட்டுறவு
- பி. மதன் ராஜா – குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME)
- கே. ஜெகதீஸ்வரி – சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாடு
- எஸ். ராஜேஷ்குமார் – சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம்
- எம். விஜய் பாலாஜி – கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்
- டி. லோகேஷ் தமிழ்செல்வன் – வணிக வரி மற்றும் பதிவுத்துறை
- ஏ. விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்து
- எஸ். ரமேஷ் – இந்து சமய அறநிலையத் துறை
- பி. விஸ்வநாதன் – உயர்கல்வித்துறை
- ஆர். குமார் – செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்
- கே. தென்னரசு – வெளிநாட்டு தமிழர் நலன், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டோர் நலன்
- வி. சம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
- ஜே. முகமது ஃபர்வாஸ் – தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு
- டி. சரத்குமார் – மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்
- என். மேரி வில்சன் – நிதித்துறை
- கே. விக்னேஷ் – மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை
இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் இளம் தலைமுறையினருக்கும், புதிய முகங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பலர் கல்வி, தொழில் மற்றும் சமூக சேவையில் அனுபவமுள்ளவர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் சேவைகள், காலநிலை மாற்றம் போன்ற புதிய துறைகளுக்கு தனி அமைச்சகங்கள் உருவாக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
Prasanth Subramani