சட்டப்பேரவையில் பரபரப்பு – திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!
தமிழக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களின் தொடர் எதிர்ப்பால் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் உத்தரவின்பேரில் அவைக்காவலர்கள் திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.
தமிழக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களின் தொடர் எதிர்ப்பால் இன்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக திரண்ட திமுக உறுப்பினர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
அமளி தொடர்ந்து நீடித்ததை அடுத்து, சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் உத்தரவின்பேரில் அவைக்காவலர்கள் திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.
சில திமுக உறுப்பினர்கள் வெளியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், அவைக்காவலர்கள் அவர்களை அவைக்கு வெளியே அழைத்துச் சென்றனர். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
முதலமைச்சர் விஜய்யின் முந்தைய நாள் உரையில் இடம்பெற்ற குற்றச்சாட்டுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த அமளி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Dharshini